இலங்கையில் தீவிரவாத தாக்குதல்களின் அபாயம் குறைந்துள்ளது! - பிரித்தானியா அறிவிப்பு
பிரித்தானியா, தமது அண்மைய பயண ஆலோசனையில், இலங்கையில் தீவிரவாத தாக்குதல்களின் அபாயத்தை குறைத்துக் காட்டியுள்ளது.
இலங்கையில் தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்த முயற்சிக்கும் ஆபத்து மிகக் குறைவு, குறைந்து வருகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்த முயற்சிக்கக்கூடும் என்று கடந்த 20ஆம் திகதியின் பயண ஆலோசனை குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விருந்தகங்கள், சுற்றுலா தளங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் போன்ற வெளிநாட்டினர் பார்வையிடும் இடங்கள் உட்பட இடங்களில் தாக்குதல்கள் இருக்கக்கூடும் என்று அது கூறுகிறது.
பயணிகள் நெரிசலான பொது இடங்கள், பெரிய கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களைத் தவிர்க்கவும், உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்றவேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
"ஈராக் மற்றும் சிரியாவில் மோதலால் குழுக்கள் அல்லது ஆட்கள், இங்கிலாந்து நலன்கள் மற்றும் பிரிதானிய பிரஜைகளுக்கு எதிராக உலகளவில் பயங்கரவாத தாக்குதல் நடத்தும் அச்சுறுத்தல் உள்ளது.
எனவே இந்த நேரத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும்
என்று இங்கிலாந்தின் வெளியுறவு அலுவலகம் கோரியுள்ளது.

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
