முட்டை மற்றும் கோழி இறைச்சி சந்தையில் கிடைக்காமல் போகலாம்
கால்நடை துறையை அத்தியாவசிய சேவையாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நாட்டு மக்கள் தமது நாளாந்த புரதத் தேவையில் மூன்றில் ஒரு பங்கை விலங்குப் புரதத்தில் இருந்து பெற வேண்டும் என கலாநிதி உஷான் பல்லேகம தெரிவித்துள்ளார்.
பால் உற்பத்திப் பொருட்கள் உள்ளிட்டவை சந்தையில் கிடைக்காமல் போகலாம்
கோழிப்பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காண வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் கோழி, முட்டை மற்றும் பால் தொடர்பான உள்ளூர் உற்பத்திகள் சந்தையில் கிடைக்காது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.