பேரிடரை தொடர்ந்து வரும் மற்றுமொரு அபாயம்.. எடுக்கப்பட்டுள்ள தீவிர நடவடிக்கைகள்
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக எதிர்காலத்தில் டெங்கு பரவும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு, டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவுடன் இணைந்து இந்தத் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
மிகப்பெரிய பேரழிவு
இது குறித்து கருத்து தெரிவித்த தேசிய டெங்கு கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர், சிறப்பு மருத்துவர் கபில கன்னங்கர, மழைக்குப் பிறகு அடுத்த மிகப்பெரிய பேரழிவு டெங்கு தொற்றுநோய் என்று கூறினார்.

முடிந்தவரை அதைக் கட்டுப்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மகேஷ் குணசேகரவும், சுகாதாரத் துறையின் முழுமையான வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.