கனேடிய நகரமொன்றில் அதிகரித்துள்ள வெப்பநிலை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடாவின்(Canada) தென்மேற்கு ஒன்றாரியோ பகுதியில்அதிகமான வெப்பநிலை நிலவும் என அந்நாட்டு தேசிய வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த பகுதியில் ஆபத்தான வெப்பநிலை மற்றும் ஈரப்பதனுடன் கூடிய வெப்பநிலை நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இடிப்புயல் நிலைமை
மேலும் ரொறன்ரோ, நயகரா, ஓவன் சவுன்ட் மற்றும் கிங்ஸ்டன் ஆகிய பகுதிகளில் இவ்வாறு கடுமையான வெப்பநிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சராசரியாக 35 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை நீடிக்கும் எனவும், ஈரப்பதன் நிலைமையுடன் பார்க்கும் போது சுமார் 40 முதல் 45 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை நீடிப்பது போன்று உணர நேரிடும் எனவும் கூறப்படுகின்றது.
இதேவேளை, ரொறன்ரோவில் இடிப்புயல் நிலைமை நீடிக்கக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு விடுத்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan