கனேடிய நகரமொன்றில் அதிகரித்துள்ள வெப்பநிலை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடாவின்(Canada) தென்மேற்கு ஒன்றாரியோ பகுதியில்அதிகமான வெப்பநிலை நிலவும் என அந்நாட்டு தேசிய வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த பகுதியில் ஆபத்தான வெப்பநிலை மற்றும் ஈரப்பதனுடன் கூடிய வெப்பநிலை நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இடிப்புயல் நிலைமை
மேலும் ரொறன்ரோ, நயகரா, ஓவன் சவுன்ட் மற்றும் கிங்ஸ்டன் ஆகிய பகுதிகளில் இவ்வாறு கடுமையான வெப்பநிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சராசரியாக 35 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை நீடிக்கும் எனவும், ஈரப்பதன் நிலைமையுடன் பார்க்கும் போது சுமார் 40 முதல் 45 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை நீடிப்பது போன்று உணர நேரிடும் எனவும் கூறப்படுகின்றது.
இதேவேளை, ரொறன்ரோவில் இடிப்புயல் நிலைமை நீடிக்கக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு விடுத்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam
மாபெரும் வெற்றியடைந்த கட்டா குஸ்தி 2... விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பிரம்மாண்ட பரிசு Cineulagam
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam