உள்நாட்டு சந்தையில் பிரதான ஏற்றுமதி பயிர்களின் விலைகள் அதிகரிப்பு
பிரதான ஏற்றுமதி பயிர்களான கறுவா, மிளகு, சாதிக்காய், கிராம்பு மற்றும் கோப்பி உள்ளிட்டவைகளின் விலை உள்நாட்டு சந்தையில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் உள்நாட்டுச் சந்தையில் ஒரு கிலோகிராம் 500 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்த மிளகு, தற்போது ஒரு கிலோகிராம் 900 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கறுவா ஒரு கிலோகிராம் 3 ஆயிரத்து 400 ரூபாயாகவும் கிராம்பு ஒரு கிலோ கிராம் ஆயிரத்து 400 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோகிராம் கோப்பி ஆயிரத்து 250 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு கிலோ பாக்கு ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த வருட ஆரம்பத்திலிருந்து இது வரையான காலப்பகுதியில் குறித்த ஏற்றுமதி பயிர்களில் 45,000 மெட்ரிக் டன் வரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam