பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கும் விலைகள்
கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு நீண்டகாலமாக நீடித்தால், பண்டிகைக் காலத்தில் பல உணவுப் பொருட்களின் விலைகள் வேகமாக அதிகரிக்கும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சிலர் கோதுமை மாவை இறக்குமதி செய்து தட்டுப்பாடு இருப்பதாக பாவனை செய்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன சிங்கள ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்தார்.
கோதுமை மா தட்டுப்பாடு தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், இதுவரையில் அதற்கான பதில் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்க அரசாங்கம் தயாராகவுள்ளதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பால் மா, எரிவாயு, கோதுமை மா மற்றும் சீமெந்து போன்றவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற போதிலும், ஏனைய அத்தியாவசியப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
