இலங்கையில் மேலும் அதிகரிக்கும் பருப்பின் விலை
இலங்கையில் பருப்பின் விலை மேலும் அதிக்க கூடும் என அத்தியாவசிய உணவுகளின் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுவரையில் சந்தையில் ஒரு கிலோ கிராம் பருப்பின் விலை 250 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளதென அந்த சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது இலங்கைக்கான பருப்பு அவுஸ்திரேலியா மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது.
எப்படியிருப்பினும் கனடாவில் பருப்பு பயிர் செய்கை பாரிய அளவு குறைவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக பருப்பின் விலை இவ்வாறு உயர்வடைய காரணமாகியுள்ளதென அத்தியாவசிய உணவுகளின் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
இதே நிலைமை தொடர்ந்தால் பருப்பின் விலை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் பால் மா கொள்வனவு செய்வதற்காக 5 யோகட் கொள்வனவு செய்ய வேண்டிய கட்டாய நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 4 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
