புதுக்குடியிருப்பில் அதிகரித்து செல்லும் கோவிட் மரணங்கள்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதியில் இன்றையதினம் இரண்டு பேர் கோவிட் தொற்றினால் மரணமடைந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர்கள் சுகவீனம் காரணமாக மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அவர்களிற்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று (07) மரணமடைந்தனர்.
புதுக்குடியிருப்பு மேற்கு மற்றும் தேவிபுரம் பகுதியை சேர்ந்த 42, 84 வயதுடைய இருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளவர்களாவர்.
குறித்த நபர்களுக்கு வேறு எவ்வித நோய்களும் அற்ற நிலையிலே மரணமடைந்துள்ளதாக சுகாதார பிரிவினரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து அவர்களை எரியூட்டுவதற்கான நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை நேற்றையதினம் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் இன்றையதினம் இடம்பெற்ற
இரண்டு மரணங்களுடன் புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதியில் இதுவரை 13 மரணங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam
