சிறுமி ஹிஷாலினி விவகாரத்தின் பின் ஒளிந்திருக்கும் உண்மை பிரச்சினையை வெளிப்படுத்தும் மனோ எம்.பி
இன்று சிறுமி ஹிஷாலினியின் பிரச்சினை பெரிதும் பேசப்படுகிறது, ஆனால் அது ஒரு சம்பவம் மாத்திரமே என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில், சிறுமி ஹிஷாலினியின் பிரச்சினை ஆயிரம் பிரச்சினைகளில் ஒரு பிரச்சினை மாத்திரமே.
பிரதானமான பிரச்சினை தான், உணர்வுபூர்வமான பிரச்சினை தான்.
ஆனால் அதன் பின்னால் ஒளிந்திருக்கக்கூடிய உண்மை பிரச்சினை என்னவென்றால் தோட்டத்தொழிலாளர்களின் வறுமை என குறிப்பிட்டுள்ளார்.