முஸ்லிம் வைத்தியரால் மரண பரிசோதனை - ஹிஷாலினியின் தாய் வெளியிட்டுள்ள சந்தேகம்
தனது மகளின் மரண பரிசோதனை முஸ்லிம் வைத்தியரொருவரால் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தனக்கு அதில் சந்தேகம் உள்ளதாக ஹிஷாலினியின் தாய் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய நிலையில் தீயில் எரிந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த டயகம பகுதியை சேர்ந்த சிறுமி ஹிஷாலினியின் மரணம் குறித்து அவரது பெற்றோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் ஹிஷாலினியின் தாய் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், என்னுடைய மகளுக்கு நிறைய அநியாயங்கள் நடந்துள்ளன.
என் மகளை இருட்டு அறையில் அடைத்து வைத்திருந்துள்ளனர் மின்விசிறி இல்லாமல், உணவு இல்லாமல். சரியான சித்திரவதை செய்துள்ளனர்.
என்னுடைய மகள் இவற்றையெல்லாம் மறைத்து எனக்கு வேலை செய்ய முடியாது இங்கிருந்து அழைத்துச் செல்லுங்கள் என கூறினார்.
இப்பொழுது தேடிப்பார்க்கும் போது எனது பிள்ளைக்கு சரியான அநியாயம் செய்துள்ளார்கள்.
எனது மகளின் மரண பரிசோதனையில் எனக்கு சந்தேகம் உள்ளது. அதை செய்துள்ளது முஸ்லிம் வைத்தியர்.
எனவே மீள மரண பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
