ரிஷாத் வீட்டில் சிறுமிக்கு நடந்தது என்ன? தற்கொலையா கொலையா - நீளும் மர்மம்
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீனின் கொழும்பிலுள்ள இல்லத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த சிறுமி குறித்து பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளிவர ஆரம்பித்துள்ள நிலையில், ரிஷாத் பதியுதீனின் மனைவி, சிறுமியை வேலைக்கமர்த்திய தரகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மரணம் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கு அமைய பொரள்ளை பொலிஸார் ரிஷாட் பதியுதீனின் வீட்டிற்கு சென்று அவரது மனைவிடம் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.
ரிஷாத்தின் மனைவியான ஷெஹாப்தீன் ஆயிஷா, மனைவியின் தந்தையான மொஹமட் ஷெஹாப்தீன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் சிறுமியை கொழும்புக்கு அழைத்து வந்து பணிக்கு அமர்த்திய தரகரான டயகம பிரதேசத்தைச் சேர்ந்த பொன்னையா பண்டாரம் அல்லது சங்கர் எனப்படும் 64 வயதான நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், சந்தேகநபர்களை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான விரிவான தொகுப்பு,