ஹிசாலினியின் உயிரிழப்பு தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ள விடயம்
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் வீட்டில் பணியாற்றிய சிறுமி ஹிசாலினி உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் விரைந்து நடத்தப்பட்டு பாதிக்கப்பட்ட தரப்பிற்கு நீதி வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார இது தொடர்பில் இன்றைய தினம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும்,
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதினின் இல்லத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழ் சிறுமி பற்றிய விசாரணைகள் விரைந்து நடத்தப்பட்டு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.
இந்த சம்பவத்தை சிலர் அரசியல்மயப்படுத்த முயற்சிக்கப்படுகிறது.
அதற்கு இடமளிக்காத வகையில் தரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.