மேலும் சில பெண்களை ரிஷாத் வீட்டிற்கு அழைத்து வந்துள்ள தரகர் - அம்பலமாகும் விடயங்கள்
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமியை அழைத்து வந்த தரகரால் மேலும் இரு பெண்கள் பணிக்காக அழைத்து வரப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சிறுமியை அழைத்து வருவதற்கு முன்னரே இவ்விரு பெண்களும் ரிஷாத் எம்.பியின் வீட்டுக்கு குறித்த தரகரால் அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், குறித்த இருவரிடமும் நீண்ட வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஷ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,