கிளிநொச்சி - இரணைமடுக்குள நீர் வரி பங்கு மோசடியின் பின்னணியில் உயர் அதிகாரிகள்
கிளிநொச்சி - இரணைமடுக்குளத்தின் கீழான சிறுபோக பயிர்ச்செய்கை கூட்டத் தீர்மானங்களுக்கு மாறாக உப்பாறு மற்றும் புலிங்கதேவன் முறிப்பு ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 58.5 ஏக்கருக்கும் மேற்பட்ட 18 நீர் வரி பங்குகள் முறையற்ற விதத்தில் கையாடல் செய்யப்பட்டுள்ளமை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
கிளிநொச்சி - இரணைமடுக்குளத்தின் கீழான இவ்வாண்டுக்கான சிறுபோக செய்கை கூட்டத் தீர்மானங்களுக்கு மாறாக பல்வேறுபட்ட முறைகேடுகள் காணப்படுவதாக பலரும் சுட்டிக்காட்டியுள்ளதுடன் குறிப்பட்ட சில விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பயிர்செய்கை இறுதி திகதி நிறைவடைந்து பத்து நாட்களின் பின்னரே நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கை காணிகளும் வழங்கப்பட்டன.
நீர் வரி பங்குகள்
இரணைமடுக்குளத்தின் 2023ஆம் ஆண்டுக்கான சிறுபோக பயிர்செய்கை கூட்டம் கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி மாவட்ட பயிர்செய்கைக் குழுவின் தலைவரும் மாவட்ட அரச அதிபருமான ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்று பயிர்செய்கைக்கான இறுதி தீர்மானங்கள் எடுக்கபட்டிருந்தன.
குறித்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு முற்றிலும் மாறாக கண்டாளை கமநல சேவை நிலையத்திற்கு உட்பட்ட புலிங்கதேவன் முறிப்பு மற்றும் உப்பாறு ஆகிய பகுதிகளுக்குரிய 25 இற்கும் மேற்பட்ட நீர்வரிப்பங்குகள் உரிய முறையில் பங்கு மாற்றம் செய்யப்படாமலும் சில விவசாயிகளின் நீர் பங்கு உரிமைகள் கமநல சேவை நிலையத்தால் நிறுத்தப்பட்டதாக தெரிவித்தும் இரகசியமான முறையில் கிளிநொச்சி கமநலசேவை நிலையத்திற்கு உட்பட்ட சின்னக்காடு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரகாரம் பெறப்பட்ட தகவல்களின் படி நீர்வரி இலக்கம் 4735 -12 ஏக்கர் 4538 -05 ஏக்கர் 4527- 03 ஏக்கர் 4743- 1.5ஏக்கர் 4531- 01 ஏக்கர் 4537- 1.5 ஏக்கர் 4538- 2.5 ஏக்கர் 4695- - 2.5 ஏக்கர் 5625 -2.5 ஏக்கர் 5317 – 02 ஏக்கர் 4349 அ 2.5 ஏக்கர் 4349 ஆ- 2.5 ஏக்கர் 4693 – 02 ஏக்கர் 5622- 02 ஏக்கர் 4348- 2.5 ஏக்கர் 4922- 02 ஏக்கர் 4565 – 02 ஏக்கர் 4712 – 9.5 ஏக்கர் நீர்வரி இலக்கங்களை கொண்ட குறித்த பிரதேசத்திற்கு சொந்தான 58.5 ஏக்கர் வரையான 18 வரையான நீர்ப்பங்குகள் -சட்ட ரீதியற்ற முறையிலே கொண்டு செல்லப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது
இதில் ஏற்கனவே ஒன்பது ஏக்கர் கொண்ட பங்கு தலா ஏக்கர் ஒன்று 37,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.
உயர் அதிகாரிகள்
அதாவது குறித்த மோசடிகளின் பின்னணியில் சில உயர் அதிகாரிகள் இருப்பதாகவும் சந்தேகங்கள் எழுந்துள்ளது.
அதாவது சிறுபோக பயிர்செய்கை மேற்கொள்ளும் சகல விவசாயிகளினதும் கமக்கார அமைப்புக்களால் கமநல சேவை நிலையங்களுக்கு சமர்ப்பிக்கப்படும் உரமானியத்துக்கான பட்டியல்கள் காட்சிப்படுத்த வேண்டிய போதும் குறித்த பட்டியல்கள் காட்சிப்படுத்தப்படுவதில்லை.
இந்த நிலையில் குறித்த பட்டியல்களை பெற்றுக் கொள்ளும் பொருட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் விண்ணப்பிக்கப்பட்டு அதன் மூலமே குறித்த பங்கு பட்டியல்ளை பெறமுடிந்துள்ளமை குறிப்படத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 16 மணி நேரம் முன்

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்திற்கு தண்டனை கிடைத்தால் இத்தனை வருடம் ஜெயிலா? Cineulagam

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம் News Lankasri
