அரிசி விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு: கடும் அதிருப்தியில் மக்கள்
தமிழ், சிங்கள புத்தாண்டு நெருங்கும் நிலையில் சந்தையில் அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
பல பகுதிகளில் அரிசி கட்டுப்பாட்டு விலையை விட அதிகமாக விற்கப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பல்வேறு தயாரிப்பு பெயர்களில் விற்கப்படும் அரிசி காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் கூறுகின்றனர்.
அரிசி விலை
220 ரூபாய் கட்டுப்பாட்டு விலையில் இருந்த நாட்டு அரிசி, சில பகுதிகளில் 230 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், 240 ரூபாய் கட்டுப்பாட்டு விலை கொண்ட சம்பா அரிசி 260 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
260 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கிரி சம்பா, சில தயாரிப்பு பெயர்களின் கீழ் 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
அரிசி விலை உயர்வு குறித்து நேற்று நாடாளுமன்றத்திலும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 4 நாட்கள் முன்
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan
ட்ரோன்கள் அத்துமீறும்... நிம்மதியாக உங்களைத் தூங்க விடாது: ஐரோப்பாவிற்கு ரஷ்யா மிரட்டல் News Lankasri