இணையவழி பாதுகாப்புச் சட்டத்தை மீள் பரிசீலனை செய்ய வேண்டும்: இலங்கையிடம் ஐ.நா வலியுறுத்து
இணைய வழி பாதுகாப்புச் சட்டமூலத்தினை மீள்பரிசோதனை செய்யுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம், இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
"புதிய இணையவழி பாதுகாப்புச் சட்டம், கருத்துச் சுதந்திரம் உட்பட மனித உரிமைகளுக்கு எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும்" என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
#SriLanka: The new Online Safety Act will have far reaching negative implications for human rights, incl. freedom of expression.
— UN Human Rights (@UNHumanRights) February 1, 2024
We urge the Govt. to consider amending the law to address concerns of civil society & industry groups & ensure it complies w/ human rights obligations
மனித உரிமைகள் ஆணைக்குழு
மேலும்,"சிவில் சமூகம் மற்றும் தொழில் குழுக்களின் கரிசனைகளை நிவர்த்தி செய்வதற்கும், மனித உரிமைகள் கடமைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கும் சட்டத்தில் திருத்தம் செய்வதை பரிசீலிக்குமாறு தாம் அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பாரிய விமர்சனங்களுக்கு உள்ளான இந்தச் சட்டம், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் அங்கீகரிக்கப்பட்டதையடுத்து, நேற்று சட்டமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam
