எந்த வகையிலும் டொலர்கள் சீனாவை சென்றடையாது : அமைச்சர் அறிவிப்பு
கொழும்பு துறைமுக நகரம் செயற்படும் போது பெறப்படும் டொலர்கள் சீனாவிற்கு செல்லாது என அமைச்சர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்.
தொழிலாளர்களுக்கு வசதிகளை வழங்கும் வளாகத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை இலங்கை, சீன நிறுவனத்துடன் கைச்சாத்திடும் நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை தற்போது டொலர் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.
சீனா மற்றும் அதன் முதலீடுகள் தொடர்பில் எவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்பட்டாலும், கொழும்பு துறைமுக நகரம் செயற்படும் போது பெறப்படும் டொலர்கள் சீனாவிற்கு செல்லாது.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் இவ்வாறானதொரு நிலைக்கு கொண்டு வரப்படும் போது, அந்த வசதி மூலம் நாட்டிற்கு ஒரு டொலர் வரவை வழங்க முடியும் என தெரிவித்துள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 2 நாட்கள் முன்
இந்தியாவில் குவிய போகும் கோடிகள்; இந்தியா - ஐரோப்பா FTA ஒப்பந்தத்தில் எந்த துறைகளுக்கு லாபம்? News Lankasri
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப்போர்க்கால குண்டுகள்: 5,000 பேர் வெளியேற்றம் News Lankasri