மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் - வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை
மன்னார் நகர பகுதியில் அண்மையில் அமைக்கப்பட்ட உணவகம் ஒன்று சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வந்த நிலையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (23) இடம்பெற்றுள்ளது.
சுகாதார நடைமுறைகள்
மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள குறித்த உணவகத்தில் உரிய முறையில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றாமல் உணவுகள் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மன்னார் நகரசபை பொது சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் ஊழியர்களின் ஒத்துழைப்புடன் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து குறித்த உணவகம் எந்த ஒரு வியாபர உரிமமும் இன்றி இயங்கி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
கண்டறியப்பட்ட விடயம்
அத்துடன் உணவகத்தின் கழிவுநீர் உரிய விதமாக அகற்றப்படாமல் புழுக்கள் இளையான் உருவாகியும் அதே நேரம் ஆரோக்கியமற்ற விதமாக உணவுகள் தயாரிக்கப்பட்டிருந்தமையும், அத்துடன் உணவுப்பொருட்கள் பாதுகாப்பற்ற முறையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் குறித்த உணவகத்திற்கு எதிராகவும், உரிமையாளர் மீதும் பல்வேறு பிரிவுகளில் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.









