கொத்தலாவல பல்கலைக்கழக மூன்றாம் ஆண்டு மாணவி உயிரிழப்பு
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சுகாதார அறிவியல் பீடத்தில் தாதியர் மற்றும் குடும்ப சுகாதார பட்டப்படிப்பை பயின்று வரும் மூன்றாம் ஆண்டு மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டின் குளியலறையில் வழுக்கி விழுந்து தலையில் பலத்த காயங்களுடன் கண்டி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
கண்டி,ஹன்டெஸ்ஸா பகுதியைச் சேர்ந்த மாணவி எச்.எம்.எல்.டி. ஜெயதிலகாஎன்ற மூன்றாம் ஆண்டு மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் விசாரணை
பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இருந்து வீடு திரும்பியதாகவும், 6 ஆம் திகதி அதிகாலை 2.00 மணி வரை படித்துக் கொண்டிருந்தபோது, குளியலறையில் வழுக்கி விழுந்ததாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கண்டி தேசிய மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை தீவிர பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவி நேற்று (08) உயிரிழந்துள்ளார்.
டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் பரீட்சைகளுக்கு தயாராகி கொண்டிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் கலஹா பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam