6 வருடங்களின் பின்னர் மீண்டும் எரிவாயு விலையை அதிகரிக்க தீர்மானம்
இலங்கையில் 6 வருடங்களின் பின்னர் சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு கோரி அதனை இறக்குமதி செய்யும் நிறுவனம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரிப்பு, அந்நிய செலாவணி வீதம், ஏனைய செலவுகளை கருத்திற்கொண்டு அரசாங்கத்திடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக லாஃப் கேஸ் நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிவாயு விலை அதிகரிப்பது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அரசாங்கத்திடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும் என தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சவுதி அரோபியாவிடம் இருந்தே இலங்கை எரிவாயு இறக்குமதி செய்வதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தங்கள் நிறுவனத்திற்கு மாதாந்தம் ஒரு பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் எரிவாயு விலையை அதிகரிக்க அனுமதி வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தங்கள் நிறுவனத்திற்கு ஏற்படும் நட்டத்தை போக்க உதவுமாறு அரசாங்கத்திடம் தாங்கள் கோரிக்கை விடுத்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 52 நிமிடங்கள் முன்

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
