அமைச்சர்களின் வாசஸ்தலங்களை அரசாங்க நிறுவனங்களுக்கு வழங்கத் தீர்மானம்
கொழும்பிலுள்ள அமைச்சர்களின் ஆடம்பர சொகுசு மாளிகைகளை தனியார் கட்டிடங்களில் இயங்கி வரும் அரச நிறுவனங்களுக்கு வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் அமைச்சு அலுவலங்கள் உள்ளிட்ட முப்பது நிறுவனங்கள் பாரிய தொகை வாடகை அடிப்படையில் தனியார் கட்டிடங்களில் இயங்கி வருகின்றன.
ஜனாதிபதி மாளிகைகள்
அவ்வாறான அமைச்சுகள் மற்றும் நிறுவனங்களுக்கு அமைச்சர்களின் சொகுசு மாளிகைகளை வழங்குவதன் ஊடாக வாடகைக்காக செலவிடப்படும் பாரிய தொகையொன்றை சேமிக்கலாம் என்று பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்கிடையே அமைச்சர்களின் மாளிகைகள் , கொழும்புக்கு வெளியில் இருக்கும் ஜனாதிபதி மாளிகைகள் போன்றவற்றை வாடகைக்குப் பெற்றுக் கொள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களும், தனிநபர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 16 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
