அதிகாரிகளின் அசமந்த போக்கால் பிரதேசவாசிகள் பாதிப்பு(photos)
திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமம் நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை கண்டி பிரதான வீதியில் மூன்று வருடங்களுக்கு மேலாக பிரதான குடிநீர்க் குழாயில் வெடிப்பு ஏற்பட்டு நீர் வீண் விரயமாகின்றது.
தம்பலகாமம் நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானையில் தொண்ணூற்றி ஆறாம் கட்டைக்கும் தொண்ணூற்று ஐந்தாம் கட்டைக்கும் இடையில் கண்டி பிரதான வீதியில் மூன்று வருடங்களுக்கு மேலாக குடிநீர் குழாய் வெடித்து நீர் வீண் விரயமாகுவதாக மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
அதிகாரிகளின் கவனயீனம்
தம்பலகாமம் நீர்ப்பாசன திணைக்களத்திற்கு பல முறை அறிவித்த பிறகும் அதிகாரிகள் வந்து பார்வையிட்டு மேலிடத்துக்கு அறிவிப்பதாக தெரிவித்துவிட்டு செல்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் குடிநீர் விரையமாவதை தடுத்து நிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்துமாறு
மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




