கடற்கரை பகுதியில் முதியவரின் சடலம் மீட்பு
கடற்கரை பகுதியில் இனந்தெரியாத முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரை பகுதியில் இனந்தெரியாத வகையில் முதியவரின் சடலமொன்று இன்றைய தினம்(06) மீட்கப்பட்டுள்ளது.
கடற்றொழிலாளர்கள் தொழிலுக்காக சென்ற போது சடலமொன்று மிதப்பது இனங்காணப்பட்டு பொலிஸாருக்கு தகவலளிக்கப்பட்டுள்ளது.
சடலம் மீட்பு
சடலத்தை பார்வையிட்ட யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தீடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார், முதியவர் தீவகப்பகுதியைச் சேர்ந்த யாசகம் பெறுபவராக இருக்கலாமென சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
இதனையடுத்து தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.