கூட்டணியில் இருந்து தூக்கி எறியப்பட்ட ரிசாட்! சஜித் வெளியிட்ட தகவல்
எதிர்வரும் நாட்களில் ரிசாட் பதியுதீன் மற்றும் அவரது கட்சியின் உறுப்பினர்கள் அகியோர் கூட்டணிக்குள் இருக்கப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்று இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு ஹரின் பெர்ணான்டோவுடன் இன்று வருகைதந்த அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோது இதனை மறைமுகமாகக் குறிப்பிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
ரிசாட் கட்சியைச் சேர்ந்த பலரும் 20ஆவது திருத்தம் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகளில் கூட்டணியின் தீர்மானங்களை எதிர்த்து செயற்பட்டதால் அவர்களை கூட்டணியிலிருந்து விலக்கியுள்ளதாக சஜித் குறிப்பிட்டுள்ளார்.