சட்டவிரோத சுருக்குவலை கடற்றொழிலை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை
சுருக்குவலை கடற்றொழிலை முழுமையாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சங்கங்கள் கூட்டாக தெரிவித்துள்ளன.
இன்று (04.04.2023) யாழ்ப்பாணத்தில் உள்ள யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பாரம்பரிய கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பு
சுருக்கு வலைக்கு அனுமதி வழங்கப்பட்ட இரண்டே முக்கால் கண் கொண்ட வலையினை பயன்படுத்தாமல் அதற்கு குறைவான கண்கொண்ட வலைகளை பயன்படுத்தி சுருக்கு வலைத் தொழில் மேற்கொள்ளப்படுகிறது.
இதன் காரணமாக அதிகளவிலான சிறிய மீன்கள் வலைகளில் அகப்படுவதனால் பாரம்பரியமாக கடற்தொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களுக்கு உரிய சந்தை வாய்ப்பு கிடைப்பதில்லை.அது மட்டுமல்லாது சுருக்கு வலைத்தொழிலில் ஈடுபடுபவர்கள் வெளிச்சம் பாய்ச்சுதல், டைனமற் அடித்தல் காரணமாக கடல் வாழ் உயிரினங்களின் பல்வகைத் தன்மை அழிவடைவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
சட்டவிரோத சுருக்குவலை தொழிலை கட்டுப்படுத்த பணிப்புரை
அண்மையில் யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் சட்டவிரோத சுருக்கு வலைத்தொழிலை கட்டுப்படுத்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்திருந்தார்.
இந்நிலையில் அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய 70வீதமான சட்டவிரோத சுருக்குவலைத் தொழில்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளமைக்கு சங்கங்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஆகவே வடமராட்சி வடக்கு, வடமராட்சி கிழக்கு ஆகிய பகுதிகளில் இடம்பெறும்
சட்டவிரோத சுருக்கு வலைத்தொழிலை தொடர்ச்சியாக கட்டுப்படுத்துவதற்கு அமைச்சர்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கப்பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈழத்தமிழரும் தமிழக இனச் சகோதரத்துவ அரசியலும் 1 மணி நேரம் முன்

6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் News Lankasri
