இலங்கையர்களிடம் விடுக்கப்பட்டுள்ள விசேட கோரிக்கை
நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
வரட்சியான காலநிலையால் நீர் நிலைகளில் நீரின் அளவு படிப்படியாகக் குறைந்து வருவதால், குடிநீர் விநியோகத்தில் பிரச்சினை ஏற்படாத வகையில் மகாவலி, நீர்ப்பாசன திணைக்களங்களுடன் கலந்துரையாடி நீரை விநியோகிக்கவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மேலதிக பொது முகாமையாளர் லசந்த வீரசேகர தெரிவித்துள்ளார்.
நீர் பாவனையாளர்கள்

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கீழ் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் நீர் பாவனையாளர்கள் இருப்பதாகவும், இவர்களில் வீட்டு நீர் பாவனையாளர்களின் எண்ணிக்கை சுமார் 22 லட்சம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குடிநீர் விநியோகத்தில் இதுவரை பெரிய பிரச்சினை ஏற்படவில்லை. எனினும் வாகனங்களை கழுவுவதற்கும், பூக்கள் மற்றும் பிற செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கும் வழங்கப்படும் குடிநீரை பயன்படுத்த வேண்டாம் என நுகர்வோரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
குடிநீர் கட்டணம்

மேலும், குளித்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு வீட்டிற்கு அருகிலுள்ள நீரூற்றுகள் (மழை) அல்லது ஆறுகள் மற்றும் ஓடைகளில் இருந்து நீரை பயன்படுத்துவதன் மூலம் குடிநீரை சேமிக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதால், வீட்டு குடிநீர் கட்டணத்தை குறைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam