பெரும் அழிவை சந்திக்க நேரிடும்: ஜனாதிபதி கோட்டாபயவிடம் அவசர கோரிக்கை
இரசாயன பசளைகளுக்கு தடைவிதிக்க எடுத்த தீர்மானத்தை சில காலங்களுக்கு ஒத்திவைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் (Gotabaya Rajapaksa) மிகவும் தாழ்மையுடன் கோரிக்கை விடுப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், ராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர், சரியான முறைகளை உருவாக்கியதும் இயற்கை பசளை தொடர்பான வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லுமாறும் அவர் கோரியுள்ளார்.
குருணாகலில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவ்வாறு செய்யவில்லை என்றால், பெரிய அழிவு ஏற்படும் எனவும் தனக்கும் வீதியில் இறங்கி செல்ல முடியாத நிலைமை உருவாகலாம் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
பசளை தொடர்பான பிரச்சினையை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்காது போல் , அது ஜனாதிபதிக்கு மாத்திரல்லாது அரசாங்கத்திற்கும் பிரச்சினையாக மாறும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் Cineulagam
அடேங்கப்பா நம்ம முத்துவா இது, ஆளே மாறிட்டாரே, என்ன செய்துள்ளார் பாருங்க... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam