பாணின் விலையை 100 ரூபாவாக அதிகரிக்க தீர்மானம்?
இலங்கையில் பாணியின் விலையை குறைந்த பட்சம் 100 ரூபாய் வரை அதிகரிக்க வேண்டும் என பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் 450 கிராம் பாணின் விலையை 10 ரூபாயில் அதிகரிப்பதற்கும் சங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய 450 கிராம் பாணின் புதிய விலை 80 ரூபாயாகும். பாண் விலை அதிகரிக்க எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில் கோதுமை மாவிற்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டொலர் இல்லை என்றே கூறப்படுகின்றது. வரலாற்றில் முதல் முறையாக 18 ரூபாயினால் கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளது.
பாண் தயாரிக்க நீரை தவிர அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளது.
இதனால் பாணின் விலையை 100 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri