இலங்கை - இந்திய கப்பல் சேவையை சிறப்பாக நடத்த முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
நாகப்பட்டினத்திலிருந்து இலங்கைக்கான கப்பல் சேவையை சிறப்பாக நடத்துவதற்காக, மதுரை - புனலூர் இரவுநேர விரைவு தொடருந்து சேவையை நாகப்பட்டினம் அல்லது காரைக்கால் வரை நீடிக்குமாறு தொடருந்து பயணிகள் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த செய்தியை இந்திய நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது. கேரளா மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகள் நாகப்பட்டினத்தில் இருந்து இந்த கப்பலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பயணிகள் சங்கங்கள்
எனினும், தற்போது நாகப்பட்டினம் மற்றும் தென் மாவட்டங்களுக்கு இடையே நேரடி தொடருந்து சேவை நடத்தப்படுவதில்லை.
இந்தப்பிரச்சினைக்கு தீர்வு காண, மதுரை - புனலூர் தொடருந்து சேவையை, நாகப்பட்டினம் அல்லது காரைக்கால் வரை நீடிக்க வேண்டும் என்று பயணிகள் சங்கங்கள் தொடருந்து துறையை வலியுறுத்தியுள்ளன.

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
