திருகோணமலை-கொழும்புக்கான இரவு நேர தொடருந்து சேவையை ஆரம்பிக்க கோரிக்கை
திருகோணமலை -கொழும்புக்கு இடையிலான இரவு நேர தொடருந்து சேவையை மீண்டும் மீள ஆரம்பிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
நாட்டில் அண்மையில் நிலவிய சீரற்ற கால நிலை மற்றும் டித்வா புயல் காரணமாக குறித்த இரவு நேர சேவை இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இருந்த போதிலும் திருகோணமலை கொழும்புக்கான பகல் நேர சேவை சேவையில் இருந்தாலும் இரவு நேர சேவையின் மூலமாகவே அதிகளவான பயணிகள் பயணிக்கின்றனர்.
இரவு நேர சேவை
உள் நாட்டு ,வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இரவு நேர சேவை மூலமே திருகோணமலை -கொழும்பு சேவையில் பயணிக்கின்றனர்.

இரவு நேர சேவையில் குளிரூட்டப்பட்ட முதலாம் தர பெட்டி காணப்படுவதனால் அதிகளவான வெளிநாட்டு பயணிகளும் கொழும்பில் இருந்து திருகோணமலையை வந்தடைகின்றனர்.
தொடருந்து திணைக்களம் இவ்வாறானவற்றை கொண்டு இரவு நேர தொடருந்து சேவையை தாமதப்படுத்தாது மீள உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 17 மணி நேரம் முன்
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri