ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் முன்வைத்துள்ள கோரிக்கை
ஒரு வாரத்திற்குள் காபந்து அரசாங்கத்தை அமைக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதிக்குக் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உயர்பீடம் இன்று இரவு கூடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமா? இல்லையா என்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி ஜனாதிபதிக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடி, நாட்டின் முன்னேற்றத்துக்கான நிலையான வேலைத்திட்டத்துடன் கூடிய காபந்து அரசாங்கத்தின் கீழ் நாட்டை ஆட்சி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த வாரத்துக்குள் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 எம்.பி.க்கள் அனைத்து அரசாங்க பதவிகளையும் இராஜினாமா செய்துவிட்டு அடுத்த சில நாட்களுக்கு நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படுவார்கள் என கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நிறைவேற்றத் தவறினால் கட்சியின் சார்பில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றில் சுயாதீனமாகச் செயற்படுவார்கள் என்றும் ஜனாதிபதிக்கான கடிதத்தில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக தயாசிறி குறிப்பிட்டுள்ளார்.

ஏர் இந்தியா துயர சம்பவம்... ஒரு வாரத்திற்கு முன்பே விமான விபத்தை கணித்த இந்திய ஜோதிடர் News Lankasri

ஏர் இந்தியா விமான விபத்து: மகிழ்ச்சியையும் சோகத்தையும் ஒரே நேரத்தில் அனுபவிக்கும் ஒரு குடும்பம் News Lankasri
