சில பொருட்களின் விலைகளை அதிகரிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது?
பால் மா, சமையல் எரிவாயு, சீமெந்து மற்றும் கோழி இறைச்சி ஆகியனவற்றின் விலைகளை அதிகரிப்பதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளதாக வார இறுதி பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போதைய சந்தை நிலைமைகளின் அடிப்படையில் குறித்த பொருட்களின் விலைகளை உயர்த்துவதற்கு அனுமதிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் கோரப்பட்டுள்ளது.
இந்த பொருட்களை உற்பத்தி செய்யும் மற்றும் இறக்குமதி செய்யும் நிறுவனங்களே இந்தக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, உலக சந்தையில் பொருட்களுக்கான விலை உயர்வு, போதியளவு நிரம்பல் இன்மை, போக்குவரத்து செலவு அதிகரிப்பு, கொள்கலன் கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்த அனுமதி கோரப்பட்டுள்ளது.
இந்தப் பொருட்கள் அனைத்தும் அரசாங்கத்தின் விலைக்காட்டுப்பாட்டின் கீழ் இருப்பதனால் அரசாங்கத்தின் அனுமதியின்றி இவற்றுக்கான விலைகளை அதிகரிக்க முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.