பாடசாலை வாகன சேவை வழங்குனர் சங்கம் அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை
பாடசாலை வாகன சேவை வழங்குனர் சங்கத்தினர் அரசாங்கத்திடம் விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.
அதன்படி, டீசல் நிவாரணம் வழங்காவிட்டால், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து சேவையிலிருந்து விலக வேண்டியிருக்கும் என்று அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (1) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அந்த சங்கத்தின் தலைவர் ருவான் பிரசாத் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கோரிக்கை
அத்தோடு, இந்த விடயத்தில் அரசாங்கம் உடனடியாக தலையிட்டுத் தீர்வைப் பெற்றுத் தர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், நேற்று (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (Ceylon Petroleum Corporation) பெட்ரோலின் விலையை 10 ரூபாவினால் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
