கிளிநொச்சி நீரியல்வளத்துறை பணிப்பாளருக்கு கடற்றொழிலாளர்கள் முன்வைக்கும் கோரிக்கை
யாழ்.மாவட்ட குருநகர், பாசையூர், கொழும்புத்துறை பகுதி கடற்றொழிலாளர்களின் சிறகுவலைத் தொழிலுக்கான வலைகளை கிளிநொச்சி மாவட்ட நீரியல்வளத்துறை திணைக்கள உதவிப் பணிப்பாளர் பிடுங்கி அகற்றியுள்ளார்.
இந்த விடயம் குறித்து பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,
இந்த தொழில் பாரம்பரியமாக 150 வருடங்களைத் தாண்டி மேற்கொண்டு வருகிறோம்.
இந்த விடயம் குறித்து நாங்கள் சென்று வினவியபோது அனுமதியைப் பெற்று மேற்கொள்ளுங்கள்
என திணைக்கள உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.
இந்நிலையில் இதற்கான அனுமதி பெறுவதற்கு பல மாதங்களாகும் அதுவரை எமது வாழ்வாதாரம் பாதிக்கப்படும், எமது பிள்ளைகளின் கல்வி பாதிப்படையும் எனவே அதுவரை எமக்கு மன்னிப்பளித்து இந்த தொழிலை மேற்கொள்ள அனுமதிக்குமாறு கோரியுள்ளனர்.
இதற்காக ஒன்றுகூடிய கடற்றொழிலாளர்கள் யாழ். பாசையூர் கடற்றொழிலாளர்
கூட்டுறவுச் சங்கத்தில் ஊடக சந்திப்பையும் மேற்கொண்டனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

பல்லவனை தள்ளிவிட்டு கொச்சையாக பேசிய வானதி அண்ணன்... அய்யனார் துணை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
