பொலிஸ்மா அதிபர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
நடப்பு நாட்களில் பொலிஸாரின் தன்னிச்சையான நடவடிக்கைகளை தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க பொலிஸ் மா அதிபர் (IGP) மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் (SLHRC) அழைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் ஊடக அறிவிப்பை வெளியிட்டுள்ள, மனித உரிமைகள் ஆணைக்குழு, மனித உரிமைகளை மீறும் வகையில் பொலிஸார் ஈடுபட்டுள்ள சட்டவிரோத செயற்பாடுகளை அவதானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தச் சூழல் ஜனநாயக சமூகத்தின் உயிருக்கும், நாட்டில் சட்டத்தின் ஆட்சிக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது மனித உரிமைகள் ஆணையத்தின் கருத்து.

மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கு நடவடிக்கை
எனவே, பொலிஸ் மா அதிபர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை நவம்பர் (21) திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு ஆஜராகுமாறு ஆணைக்குழு கோரியுள்ளது.
நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாக்கக் கட்டுப்பட்ட ஒரு பாதுகாப்பு அமைப்பிலிருந்து இதுபோன்ற நடவடிக்கைகளை மன்னிக்க முடியாது.
இந்த நிலையில், எதிர்வரும் 21ஆம் திகதி, எதிர்பார்க்கப்படும், கலந்துரையாடலின்
போது, எதிர்காலத்தில் மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய
நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித
உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.