பேர்ல் கப்பல் நிறுவனத்திடம் விடுக்கப்பட்டுள்ள நட்டயீட்டு கோரிக்கை
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் நிறுவனத்திடம் முதல் நட்டயீட்டுக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் ஏற்கனவே ‘எக்ஸ்-பிரஸ் பேர்ல் ’ சரக்குக் கப்பல் நிறுவனத்திடம், தீவிபத்தால் ஏற்பட்ட பொருளாதார சேதங்களுக்கு இழப்பீடு கோரியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த இழப்பீட்டை இலங்கையின் சட்டமா அதிபர் ஊடாக கோரியுள்ளதாக இலங்கையின் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையகத் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹதபுர தெரிவித்துள்ளார்.
எனினும் இழப்பீட்டுத் தொகை தொடர்பில் அவர் தகவல் எதனையும் வெளியிடவில்லை. இது தவிர, தீ விபத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கான இழப்பீடும் நிறுவனத்திடம் கோரப்படும் என்று லஹதபுர கூறியுள்ளார்.
இதற்கிடையில், கப்பலில் இருந்து சுற்றுச்சூழலில் வெளியேற்றப்பட்ட கிட்டத்தட்ட 40 கொள்கலன்கள் இதுவரை அகற்றப்பட்டுள்ளன.
கப்பலின் பெரும்பாலான கழிவுகள் கரை ஒதுங்கியுள்ளன.
அப்புறப்படுத்தப்பட்ட கழிவுகளைக் கொண்ட ஒரு கொள்கலன் சுமார் 20 மெட்ரிக் தொன்
எடையைக்கொண்டது லஹதபுர கூறியுள்ளார்.