இலங்கை சுகாதார கல்வி அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் அலுவலகத்தில் மற்றும் செய்தியாளர் சந்திப்புகளின் போது முகக்கவசங்களை அணியுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள டெல்டா மாறுபாட்டுடன், சுகாதார வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவது முக்கியம் என்று இலங்கை சுகாதார கல்வி அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சில நிறுவனங்கள் மற்றும் தனியார் கடமைகளின் போது முகக்கவசங்களை அணியாமல் தவறான சமிக்ஞையை பொதுமக்களுக்கு காட்டுவதாக சங்கம் தெரிவித்துள்ளது.
சில அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஊடக சந்திப்புகள் மற்றும் ஊடக நிகழ்வுகளில் முகக்கவசங்களை அணிவதில்லை. அவர்கள் சமூக தூரத்தை பராமரிக்கவில்லை.
இது பொதுமக்களுக்கு தவறான சமிக்ஞையை காட்டுகிறது என்று இலங்கை சுகாதார கல்வி அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த வாரம் கொழும்பில் உள்ள தெமட்டகொட பகுதியில் பெறப்பட்ட ஐந்து
மாதிரிகளிலிருந்து அதிக அளவில் பரவும் பி .1.617.2 மாறுபாடு (டெல்டா)
கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
