கனடாவில் இளம் பெண்ணின் புகைப்படத்துடன் பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்
கனடாவில் காணாமல்போயுள்ள இளம் பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளனர்.
கனடாவின் பேரி நகரை சேர்ந்த கசண்ட்ரா புர்னெல் (27) எனும் இளம்பெண் கடந்த 14 ஆம் திகதி காணாமல்போயுள்ளார்.
இதனை தொடர்ந்து குறித்த பெண் தொடர்பில் எந்தவொரு தகவலும் கிடைக்கப்பெறாத நிலையில்,பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
27 வயதான கசண்ட்ரா ரொறன்ரோ பகுதியில் இருக்கலாம். அவர் குறித்து யாருக்காவது தகவல் தெரிந்தால் எங்களிடம் கூறுங்கள். கசண்ட்ரா, பேரி பகுதியில் காணப்பட்டாலும் தகவல் தெரிவிக்குமாறும்,தொலைபேசி எண்களை வழங்கி பொலிஸார் உதவி கோரியுள்ளனர்.