ஏழு இலங்கை தமிழர் விடுதலை விவகாரம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
ஏழு இலங்கை தமிழர் விடுதலையில் புதிய ஆளுநர் உரிய முறையில் செயல்பட வேண்டும் என வழக்கறிஞர் ஹென்றி திபேன் (Henry Thieben) தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கான அரசமைப்பு உரிமைக் கல்வியை குழந்தைகளுக்கு கொண்டு செல்லும் வகையில் நெறியாளர்களுக்காண 3 நாள் பயிற்சி நிறைவு நாள் விழா திருச்சி மணிகண்டத்தில் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது பயிற்சி நிறைவு நாள் விழாவில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 70 க்கும் மேற்பட்ட நெறியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதன்போது குழந்தைகளுக்கு அரசமைப்பு மற்றும் மனித உரிமைகளை பற்றி அடிப்படை புரிதல் மற்றும் உரிமை சார்ந்த கண்ணோட்டத்தை விளக்குவது, அரசமைப்பு உரிமை கல்வி குழந்தைகள் மத்தியில் சிறப்பாக கொண்டு செல்ல திறன்களை வளர்ப்பது, குழந்தைகளுக்கான அரசமைப்புஉரிமை கல்வி மன்றங்களில் இலக்கு, திசைவழி, நோக்கங்கள் அவற்றின் போக்கு மற்றும் செயல்திட்டங்கள் குறித்து தெளிவைக் கொண்டுவருவது, மன்றங்களுக்கான பாடநூல்களை நிறைய நெறியாளர்களுக்கு அறிமுகம் செய்து குழந்தைகளுக்கு முறையாக கொண்டு செல்ல தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சி பட்டறையில் சிறப்பு விருந்தினராக மதுரை மக்கள் கண்காணிப்பகம் செயல் இயக்குனர் வழக்கறிஞர் ஹென்றிதிபேன் கலந்துகொண்டு குழந்தைகளுக்கான அரசமைப்பு உரிமை கல்வி மன்றங்களை வலுப்படுத்தல் குறித்து விளக்கியுள்ளார்.