முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நஜீப் ஏ மஜீத் தொடர்பாக அனுதாபப் பிரேரணை நடத்தக் கோரிக்கை
சில மாதங்களுக்கு முன்னர் காலஞ்சென்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் , அமைச்சரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான மர்ஹூம் நஜீப் ஏ மஜீத் தொடர்பான அனுதாபப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்து தருமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அனுதாப் பிரேரணைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவது வழக்கம். எனினும், சில முன்னாள் உறுப்பினர்களுக்கான பிரேரணைகள் நீண்ட காலங்களுக்குப் பின்னர் சமர்ப்பிக்கப்படுகின்றன.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஏற்பாடு
இந்தத் தாமதத்தைத் தவிர்க்கும் பொருட்டு நஜீப் ஏ மஜீத் தொடர்பான அனுதாப் பிரேரணையை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்து தருமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan