தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து விசாரணை நடத்துமாறு கோரிக்கை
தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து விசாரணை நடாத்துமாறு கத்தோலிக்க தேவாலயம் கோரிக்கை விடுத்துள்ளது.
பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச்செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் குறிப்பிட்ட கருத்துக்கள் தொடர்பில் கரிசனை கொண்டுள்ளதாக அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
2019ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் போன்றதொரு தாக்குதல் இடம்பெறக்கூடும் என ஞானசார தேரர் அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ஞானசார தேரரின் கருத்து குறித்து விசாரணை நடாத்தப்பட வேண்டுமென அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.