அமைச்சரவைக்கு செல்லும் சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பான அறிக்கை
சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்பான முழுமையான அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகத்திற்கு நெருக்கமான தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
அனைத்து கட்சிகளாலும் முன்மொழியப்பட்ட பரந்த கொள்கைகளை முடிவு செய்யும் தீர்மானத்துக்காகவே இந்த அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதன் பின்னர் சர்வக்கட்சி அரசாங்கம் உடனடியாக உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வக்கட்சி அரசாங்கம் அமைக்கப்படாது:சர்வக்கட்சி வேலைத்திட்டம் குறித்து கவனம் செலுத்தும் ஜனாதிபதி |
இலங்கையின் இராஜதந்திர பிரதிநிதித்துவம்
இதன்படி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு இடமளிக்கும் வகையில் ஒரு பாரிய அமைச்சரவையே அமையும்.
அதன் பின்னரே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தொடர் வேலைத்திட்டங்கள்
ஆரம்பிக்கப்படும்.
பொருளாதார அபிவிருத்தியில் கவனம் செலுத்துவதுடன், வெளிநாடுகளில் இலங்கையின்
இராஜதந்திர பிரதிநிதித்துவத்தின் முழுமையான மறுசீரமைப்பும் இதில் அடங்கவுள்ளது.
இந்த நோக்கத்திற்காக வெளிநாடுகளில் சில முக்கிய பதவிகளில் பணியாற்றுபவர்கள் திரும்ப அழைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வக்கட்சி அரசாங்கத்தின் இலக்குகள்
இதன்போது கட்சிகளுக்கு இடையில் முரண்பாடுகள் தோன்றலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது சர்வக்கட்சி அரசாங்கத்தின் இலக்குகளை அடைய உதவுமா என்பதும் முக்கியமான
கேள்வியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.