சுகாதார அமைச்சருக்கு எதிராக வவுனியாவில் கையெழுத்துப் போராட்டம் (Photos)
சுகாதார அமைச்சரை மாற்றுமாறு கோரி வவுனியாவில் கையெழுத்துப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கையெழுத்துப் போராட்டமானது, ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட கிளையினால் வவுனியா செட்டிக்குளத்தில் நேற்றையதினம் (01.09.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரச வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டிற்கு உடனடியாக தீர்வு வேண்டும் எனக் கோரி பொதுமக்களிடம் கையெழுத்துப் பெறும் முகமாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நன்மை செய்யக்கூடிய ஒருவர்
'மருந்து தட்டுப்பாட்டை நீக்குவதுடன், தற்போதைய சுகாதார அமைச்சரை மாற்றி மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய ஒருவர் அந்த பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும்' என குறித்த போராட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னிமாவட்ட முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |













தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 23 மணி நேரம் முன்

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam
