கிளிநொச்சியில் ஆபத்தான நிலையிலுள்ள மரங்களை அகற்றும் நடவடிக்கை தீவிரம் (Photos)
கிளிநொச்சி மாவட்டத்தில் ஆபத்தான நிலையிலுள்ள மரங்களை அகற்றும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி வட்டக்கச்சி பிரதான வீதியில் ஆபத்தான நிலையில் காணப்பட்ட மரம் அகற்றப்பட்டுள்ளது.
கரைச்சி பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர் ஜீவராஜின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான நிலையில் காணப்பட்ட மரம்
முல்லைத்தீவு மாவட்டத்துக்கான பிரதான மின் விநியோகம் இடம்பெறும் மற்றும் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் வீதியில் ஆபத்தான நிலையில் காணப்பட்ட மரமே இவ்வாறு அகற்றப்பட்டுள்ளது.
அரசாங்க மரக்கூட்டுத்தாபன கிளிநொச்சி உதவி பிரதேச முகாமையாளர், ஊழியர்கள், மின்சார சபை ஊழியர்கள், இடர் முகாமைத்துவ பிரிவினர், கரைச்சி பிரதேச சபையினர் முன்னிலையாகியிருந்த நிலையில் குறித்த மரம் அகற்றப்பட்டுள்ளது.
மேலும் கிளிநொச்சி நகரில் 29 ஆபத்தான மரங்கள் மற்றும் கிளைகள் அகற்றுவதற்காக
அடையாளப்படுத்தப்பட்டு, அனுமதி பெறுவதற்காக அனுப்பப்பட்டுள்ளதாக அரசாங்க மரக்
கூட்டுத்தாபனத்தினர் தெரிவித்துள்ளனர்.





இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த தக் லைஃப்.. இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam
