இலங்கையர்கள் நாட்டுக்கு டொலர்களை அனுப்புவது மூன்று மடங்காக குறைந்துள்ளது
வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் அங்கிருந்து இருந்து இலங்கைக்கு டொலர்களை அனுப்புவது சுமார் மூன்று மடங்காக குறைந்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் ஆயிரத்து 255 மில்லியன் டொலர்களை வெளிநாடுகளில் தொழில் புரிவோர் இலங்கைக்கு அனுப்பி இருந்தனர்.
எனினும் இந்த ஆண்டு அந்த தொகையானது 464.1 மில்லியன் டொலர்களாக குறைந்துள்ளது. கடந்த காலங்களில் அந்நிய செலாவணி சந்தையை செயற்கையாக கட்டுப்படுத்தி வைத்திருந்ததன் காரணமாக இலங்கைக்கு டொலர்கள் வருவது வீழ்ச்சியடைந்தது.
இதன் காரணமாக இலங்கைக்கு 5 ஆயிரத்து 500 மில்லியன் டொலர் கிடைக்காமல் போயுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் நாட்டுக்கு டொலர்களை அனுப்பாமை மற்றும் ஏற்றுமதி வர்த்தகம் குறைந்தமை என்பன இதற்கு காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 19 மணி நேரம் முன்
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri
இது மட்டும் நடந்தால் கதையே மாறிடும்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகர் கதை பற்ற போட்ட பதிவு வைரல் Cineulagam