இலங்கையர்கள் நாட்டுக்கு டொலர்களை அனுப்புவது மூன்று மடங்காக குறைந்துள்ளது
வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் அங்கிருந்து இருந்து இலங்கைக்கு டொலர்களை அனுப்புவது சுமார் மூன்று மடங்காக குறைந்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் ஆயிரத்து 255 மில்லியன் டொலர்களை வெளிநாடுகளில் தொழில் புரிவோர் இலங்கைக்கு அனுப்பி இருந்தனர்.
எனினும் இந்த ஆண்டு அந்த தொகையானது 464.1 மில்லியன் டொலர்களாக குறைந்துள்ளது. கடந்த காலங்களில் அந்நிய செலாவணி சந்தையை செயற்கையாக கட்டுப்படுத்தி வைத்திருந்ததன் காரணமாக இலங்கைக்கு டொலர்கள் வருவது வீழ்ச்சியடைந்தது.
இதன் காரணமாக இலங்கைக்கு 5 ஆயிரத்து 500 மில்லியன் டொலர் கிடைக்காமல் போயுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் நாட்டுக்கு டொலர்களை அனுப்பாமை மற்றும் ஏற்றுமதி வர்த்தகம் குறைந்தமை என்பன இதற்கு காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam