இலங்கை மக்களுக்கு நிம்மதியளிக்கும் தகவல் - குறையும் கோவிட் தொற்று - செய்திகளின் தொகுப்பு
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் கோவிட் தொற்று உறுதியான மேலும் 680 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, நாட்டில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 28 ஆயிரத்து 415ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 4 இலட்சத்து 91 ஆயிரத்து 238 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 23 ஆயிரத்து 769 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, இலங்கையில் மேலும் 31 பேர் கோவிட் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை இணைத்து வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,