ஜெனீவாவில் இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் தொடர்பில் ஆய்வு

United Nations Sri Lankan Tamils Tamils Geneva
By Independent Writer Sep 26, 2025 07:11 PM GMT
Independent Writer

Independent Writer

in இலங்கை
Report

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் அவைக் கூட்டத்தில் இலங்கையைப் பற்றிய தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில்,  மடங்கற்திங்கள் இன்று(26) ஒரு முக்கியமான ஆய்வாக நடைபெற்றது.

அது வலிந்து ஆட்கள் காணாமல் ஆக்கப்படுவதை தடுத்துக் காக்கும் பன்னாட்டு உடன்படிக்கை தொடர்பான ஐ.நா. குழுவின் இலங்கை தொடர்பாக ஆய்வாகும்.

இலங்கை 2016 இல் இந்த உடன்படிக்கையில் இணைந்தது. ஆனால் 2018 இல் அளிக்க வேண்டிய அரசின் அறிக்கை 2023 இல் மட்டுமே கொடுக்கப்பட்டது.

மன்னாரில் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

மன்னாரில் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

விசாரணை அறிக்கைகள் 

 காணாமல் போனோரின் குடும்பங்களோடு கலந்து விசாரணை அறிக்கைகள் தயாரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காணாமல் போனோரின் மொத்த எண்ணிக்கையை சிறிலங்கா அரசு இன்றுவரை வெளிப்படுத்தவில்லை. பல்வேறு விசாரணைக் குழுமங்கள் ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள் பெற்றும் தெளிவான முடிவுகள் எதுவும் இன்றுவரை எட்டப்படவில்லை.

ஜெனீவாவில் இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் தொடர்பில் ஆய்வு | Relatives Those Were Forced To Flee Sl In Geneva

30 இற்கும் மேற்பட்ட மாந்தர் பண்பாட்டிற்கே புறம்பான பெரும் மனிதப்புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டும் வழக்குகள் எதுவும் நீதிமன்றத்தில் முன்னேறவில்லை.ஆட்சிகள், அரசுகள் மாறினாலும் காணாமல் போனோரின் குடும்பங்கள் தொடர்ந்து மிரட்டல், துன்புறுத்தல்களை எதிர்கொள்கின்றன.

இனம் கடந்து இலங்கையின் மூவின மக்களும் காணமல் ஆக்கப்பட்ட பேரிடரை எதிர்கொண்ட மக்களாக தமது பெருந்துன்பத்துடன் நீதிவேண்டி அறவழியில் போராடுகின்றார்கள்.

சிறிலங்காவின் அரச சட்டத்தரணி பொதுச்செயலகம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவினர் முறையிட்ட வழக்குகளை முன்னெடுக்காமல் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நிலை நீண்டகாலம் தொடர்வதாகவே தமிழ்மக்கள் இச்செயலை நோக்குகின்றனர்.

இந்த ஆண்டு நடைபெறும் பன்னாட்டு மன்றத்தின் (ஐ.நா) ஆய்வு, இலங்கையின் புதிய அரசுக்கு பழைய மறுப்பு உள்ளப்போக்கிலிருந்து விலகி, உண்மையை ஒப்புக்கொண்டு மாந்தர் பேரன்பு (மனிதநேய) அடிப்படையில் இடர்களுக்கு அறத்துடன் நீதி வழங்க வாய்ப்பளிக்கிறது.

வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் 

இதனை புதிய சிறிலங்கா அரசு பயன்படுத்துமான என்பதும் ஐயமே?... ஒவ்வொரு காணாமற்போனவரும் ஒருவரின் மகன், மகள், கணவர் அல்லது மனைவியென நினைவூட்டும் வகையில், குடும்பங்களின் துயரங்கள் மீண்டும் ஜெனீவா மேடையில் வெளிப்படும் பொருட்டு இலங்கையில் இருந்து 7 அன்னையர்கள் ஜெனீவாவிற்கு வருகை அளித்துள்ளனர்.

இவர்களில் சிங்கள இனத்து அன்னையரும் உள்ளனர். ஈழத்திலும் இலங்கையிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை இன்றுவரை தேடும் அறப்போராட்ட அன்னையர்கள் தமது சான்றுகளையும் வேண்டுகையினையும் உலகப்பொதுமன்றில் இக்காலத்தில் முன்வைக்கவுள்ளனர்.

ஜெனீவாவில் இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் தொடர்பில் ஆய்வு | Relatives Those Were Forced To Flee Sl In Geneva

இந்த அன்னையர்கள் இலங்கையில் இடம்பெற்ற பெரும்போர் காலத்திலும் மற்றும் அதற்கு பின்னரான காலத்திலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களே.

2009 மே இறுதிக் கட்டப் போர் மற்றும் அதனுடன் தொடர்புடைய காலப் பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகளவில் காணப்படுவதுடன், ஏனைய மாகாணங்களிலும் காணப்படுகின்றனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொடர் சுழற்சி முறையிலான போராட்டம் இன்றுவரை ஓய்வின்றி நடந்து வருகின்றது. இலங்கையின் பல பகுதிகளில் இருந்தும் தமது உறவுகளைத் தேடும் அறப்போராட்ட அன்னையர் ஜெனீவா ஐ.நா மன்றத்திற்கு வருகை அளித்திருக்கும் வேளை கடந்த வியாழக்கிழமை (25) செந்தமிழ் திருமறையில் கருவறையில் தமிழ் வழிபாடு நோற்கும் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரத்திற்கு நவராத்திரி விழாக் காலத்தில் வருகை அளித்தனர்.

சைவநெறிக்கூடம் 

சைவநெறிக்கூடம் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர்கள் அன்னையற்கு மதிப்பளித்து இறைதிரு அருட்பொருட்களை வழங்கினர்.

சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் தொடர்ந்து பேசுகையில் „அன்னையர்களது போராட்டம், இனத்தைக் கடந்து அறம் சார்ந்தது, இவர்களின் இழப்புக்களை எவராலும் இட்டு நிரப்ப முடியாது.

ஜெனீவாவில் இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் தொடர்பில் ஆய்வு | Relatives Those Were Forced To Flee Sl In Geneva

இழப்புக்களுக்கு நிகர்மை ஆற்றமுடியாது. அதேவேளை உறவுகளை தேடுபவர்கள் முன்னெடுக்கும் இப்போராட்டத்திற்கு முழுமையான நீதி கிடைக்க வேண்டும்.

அன்னையர்கள் மேற்கொள்ளும் அறவழிப்போராட்டத்திற்கு சைவநெறிக்கூடம் என்றும் இசைவுடன் பக்கவலிமை சேர்க்கும் என்று உறுதி அளித்தார்.

சமயரீதியான ஆற்றுப்படுத்தல் செயலினையும் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர்கள் ஆற்றினர். அன்னையர்களின் செயற்பாடுகளுக்கு துணைநிற்கும் திருவளர். லாவண்யா சின்னத்துரை மற்றும் திருவளர் துசாந்திக்கும் சைவநெறிக்கூடத்தின் சார்பில் நன்றி பகிரப்பட்டது.

திஸ்ஸமஹாராமவில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி

திஸ்ஸமஹாராமவில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி


மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Dortmund, Germany

07 Feb, 2026
மரண அறிவித்தல்

வதிரி, Croydon, United Kingdom

07 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Mitcham, United Kingdom

29 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, அல்வாய், Chingford, United Kingdom

21 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், பரந்தன், Chur, Switzerland, Markham, Canada

21 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கொழும்பு, Markham, Canada

10 Feb, 2025
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
நன்றி நவிலல்

வண்ணார்பண்ணை, ஓட்டுமடம், நல்லூர், செங்காளன், Switzerland

10 Jan, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

மிருசுவில், Bonn, Germany

28 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கிளிநொச்சி, பேர்ண், Switzerland

04 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
நன்றி நவிலல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம்

06 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, பேர்ண், Switzerland

26 Jan, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியநீலாவணை, கல்முனை

22 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், North Harrow, United Kingdom

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வட்டகச்சி, Bobigny, France

21 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

08 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், London, United Kingdom

09 Feb, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், தாவடி, பரிஸ், France

08 Feb, 2020
21ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சேரியடி, Luzern, Switzerland

30 Jan, 2005
மரண அறிவித்தல்

துன்னாலை, London, United Kingdom

27 Jan, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Wellington, New Zealand

06 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாசார் பளை, நீராவியடி, யாழ்ப்பாணம்

10 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Speyer, Germany, Kassel, Germany

07 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, யாழ்ப்பாணம்

07 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, Islington, United Kingdom

28 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US