சில்வா தாக்கல் செய்த மனு: நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
சுதந்திரக் கட்சியில் இருந்து தன்னை இடைநிறுத்தியதை செல்லுபடியற்றது என்று அறிவிக்குமாறு கோரி அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா முன்வைத்திருந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கட்சியின் தீர்மானத்தை மீறி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கியமை மற்றும் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பெடுத்தமை காரணமாக நிமல் சிரிபால டி சில்வா உள்ளிட்ட எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் அங்கத்துவத்தை சுதந்திரக் கட்சி இடைநிறுத்தியுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
இந்நிலையில் சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் பதவியில் இருந்தும் அங்கத்துவத்தில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டமைக்கு எதிராக அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனு மீதான விசாரணை இன்று மேற்கொள்ளப்பட்ட போது கொழும்பு மாவட்ட நீதிபதி பூர்ணிமா பரணகமகே அதனை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.


மீண்டும் பதின்மூன்றா....! 1 நாள் முன்

எனக்கும் ஜனனிக்கும் இருக்கும் ரிலேஷன்ஷிப் எங்களுக்கு தெரியும்! உண்மையை ஒப்புக் கொண்ட அமுதவாணன் Manithan

பிரான்ஸ் உணவகங்களில் பீட்சா தயாரித்துவந்த நபர் கைது: தெரியவந்துள்ள அதிரவைக்கும் பின்னணி News Lankasri

எல்லையில் குவிக்கப்படும் 5,00,000 ரஷ்ய வீரர்கள்: தாக்குதல் பகுதிகள் இதுவாக இருக்கும் என அமைச்சர் தகவல் News Lankasri
