பாடசாலை மாணவர்களுக்கான ஆங்கில பாடம் தொடர்பில் கல்வியமைச்சு எடுத்துள்ள தீர்மானம்
விரும்பிய எந்தவொரு பிள்ளையும் ஆரம்ப வகுப்பில் இருந்து உயர்தரம் வரை ஆங்கில மொழியில் கல்வி கற்பதற்கான சந்தர்ப்பம் வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை அமுல்படுத்தவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தை முதன்முதலில் ஒரு பைலட் திட்டமாக செயல்படுத்த நுகேகொடை, கங்கொடவில விஜயராம வித்தியாலயம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்காக விசேட வசதிகளை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு ஆராய்ந்து பார்ப்பதற்காக குறித்த தரப்பினருடன் கலந்துரையாடல் மேற்கொள்ள கல்வி அமைச்சின் நிபுணர்கள் கொண்ட குழுவின் ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட பேராசிரியர், பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக இதுபோன்ற ஒரு திட்டத்தை செயல்படுத்துவது மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.