பிரித்தானிய வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்ட அகதிகளின் வரவு
இந்த ஆண்டு பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த அகதிகளின் எண்ணிக்கை 25,000ஐ தாண்டியுள்ளது.
இது போன்ற ஒரு எண்ணிக்கை வரலாற்றில் முதன்முறையாக எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் குறித்த எண்ணிக்கை 16,842ஆக இருந்தது.
பெரும் சவால்
இவ்வாறிருக்க, கடந்த புதன்கிழமை 898 பேர் பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த திடீர் அதிகரிப்பு, சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ள பிரித்தானிய அரசுக்கு பெரும் சவாலாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக படகு மூலம் பிரித்தனையாவிற்குள் நுழைவதை தடுக்கும் விதமாக பிரித்தானிய அரசு சமீபத்தில் 25 நபர்கள் மீது தடைகளை விதித்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் திருவிழா





ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri
